Sunday, March 26, 2006

ஓரு வித்தியாசமான சிந்தனை

இன்றைய அரட்டை அரங்கத்தில் ஒரு பெண்மணி கூறிய கருத்து,

உன் வாழ்க்கையில் எப்போது தோல்விகள் நிற்கிறதோ, அப்போது வெற்றியும் நின்று விடுகிறது.

Saturday, March 25, 2006

நீ எதை எடுத்தாயோ அது இங்கிருந்தே எடுக்கப் பட்டது

இன்றைய வாரமலரில் இது உங்கள் இடம் பகுதியில் ஏ.ஸ்.தேவன் என்பவர் தன்னுடைய அனுபவத்தை எழுதியிருந்தார்.
அது அப்படியே உங்களுக்கு.

நான் சென்னையில் டிரைவராக பணிபுரிந்த போது, ஒரு நாள் பணி நிமித்தமாக சென்னை கே.கே.நகர் அருகில், ஒரு மணி நேரம்
காரில் காத்திருக்க வேண்டிய நிலை. அப்போது நான் கண்ட காட்சி என் வாழ்க்கையில் திருப்பு முனையாக இமைந்தது.
நான் காத்திருந்த இடத்தின் அருகில் இருந்த குப்பைத் தொட்டியில் பழைய பேப்பர் பிளாஸ்டிக் பொருட்கள் சேகரிப்பவர், அந்த குப்பையைக்
கிளறி அவருக்குத் தேவையான சில பொருட்களை எடுத்துச் சென்றார்.

பின் சிறிது நேரம் கழித்து மற்றொரு பழைய பொருள் சேகரிப்பவர் வந்து அப்படியே செய்தார். அது போல் அந்த ஒரு மணி நேரத்தில்
ஆறு நபர்கள் வந்து, அந்த குப்பைத் தொட்டியைக் கிளறி தேவையானது கிடைக்க, நம்பிக்கையோடு அடுத்த இடம் சென்றனர்.
வாழ்க்கையில் மிகவும் தோல்விகளைச் சந்தித்து எதிர்காலம் கேள்விக்குறி என்ற நிலையில் அப்போது இருந்தேன். ஆனால் ஒரே ஒரு குப்பைத் தொட்டியில் ஆறு பேருக்குப் பலன் கிடைக்கும் போது, இந்த பரந்த உலகில் வாழ்க்கையில் முன்னேற எத்தனையோ நேர்மையான, நிலையான
ஒளிமயமான வாய்ப்புகள் உண்டு என்பதை அதன் பிறகு மனதில் உறுதியோடு செயல்பட்டேன்.

தற்போது நான் நான்கு பேர்களுக்கு வேலை கொடுக்கும் அளவிற்கு சொந்தத் தெழில் செய்கின்றேன். இளைஞர்களே... வாழ்க்கையில்
எற்படும் தோல்விகளையும், ஏமற்றங்களையும் கண்டு மனம் தளராமல் முயற்சி செய்தால் வெற்றி நிச்சயம்.
-- நன்றி தினமலர்-வாரமலர்.

வாழ்க்கையில் நமக்குத் தேவையானவைகள் நம்மைச் சுற்றியே இருக்கின்றன. இதைத்தான் கிருஷ்ணர் "நீ எதை எடுத்தாயோ அது இங்கிருந்தே எடுக்கப் பட்டது" என்று கூறினாரோ?

வெற்றியின் ரகசியம்

தோல்வி எனும் காயை பக்குவமாகக் கனிய வைத்தால் வெற்றி இலவசம்

Friday, March 24, 2006

ஒரு பொன்மொழி

இது கொஞ்சம் பழசு தான். எனக்குப் பிடித்தது.

என்னால் முடியும் என்பது தன்னம்பிக்கை.
என்னால் மட்டுமே முடியும் என்பது அகம்பாவம்

வணக்கம் முதல் பதிவு

தமிழ்வலைப் பதிவர்களுக்கு என் வணக்கம்.
கடந்த நான்கு மாதங்களாக பல பதிவர்களின் பதிவுகளைப் படித்து வந்துள்ளேன். எனக்கும் வலைப் பதிவு என்ற பெரிய உலகத்தில் ஒரு சிறிய இடம் கிடக்கும் என்ற தன்னம்பிக்கையோடு வலைப்பதிவினை ஆரம்பிக்கின்றேன்.

இங்கு சாதாரண மக்களுக்குப் பிடித்தமான சில விசயங்கள் சொல்லப்படும். என் வலைப்பதிவின் தலைப்பிற்கு பொருத்தமான சில விசயங்களும் அவ்வப்போது இங்கு சொல்லப்படும்.

இப்படிக்கு தங்களின் மேலான ஆதரவை விரும்பும்
X - எக்ஸ்

Thursday, March 23, 2006

முதல் பதிவு

சோதனை