தோல்வி என்பது தாமதமே. நீங்கள் தோற்க்கடிக்கப்படவில்லை
தோல்வி என்பதன் அர்த்தம் தாமதமே. நீங்கள் இன்னும் தோற்க்கடிக்கப்படவில்லை. மேலே சொன்ன வாக்கியங்கள் ஒரு மனிதனின் வாழ்க்கையை புரட்டிப் போட முடியுமா. முடியும். நீங்கள் தோல்வி அடைந்து விட்டதாக நினைக்கும் போது இந்த வாக்கியங்களை நினைவு கொள்ளுங்கள். மீண்டும் ஒரு கை பார்த்து விடுவோம் என நினைத்து செயலில் இறங்கி விடுவீர்கள். இதற்கு உதாரணமாகக் குறிப்பிட விரும்புவது என் வாழ்க்கையில் நடந்த ஒரு சம்பவம். இது நடந்தது 2000-2001 ம் வருடங்களில்.
MCA படிப்பில் மூன்றாவது செமஸ்டரில் கப் வைத்தால் சில சிரமங்கள் உள்ளன. அதாவது 3வது தேர்வு முடிவுகள் 4வது தேர்வு நடப்பதற்கு ஒரு மாதத்திற்கு முன்பு MK யுனிவர்சிட்டியுல் சொல்லுவார்கள். அதை 4வது தேர்வுடன் சேர்த்து எழுதினால் 5வது தேர்வு நடப்பதற்கு ஒரு மாதம் முன்பு முடிவு அறிவிப்பார்கள். இங்கு தான் சிக்கலே. 5வது செமஸ்டர் ஆரம்பம் முதலே campus interview க்கு கம்பெனிகள் வர ஆரம்பிக்கும். பெரும்பாலான கம்பெனிகள் முதல் 3 மாதங்களில் தேர்வு அடையாவிட்டால் கம்பெனிகள் அமைவது கடினம். பல கம்பெனிகள் அரியர் இல்லாத மாணவர்களைத்தான் தேர்வு எழுத அனுமதிப்பார்கள்.
இந்த நிலையில் மூன்றாவது செமஸ்டரில் ஒரு பேப்பரில்(system engineering) அரியர்(cup) வைத்தேன். பள்ளியில் இருந்து ஒரு பாடத்தில் கூட பெயில் ஆனது இல்லை என்ற நினைப்பே மனதில் ஒரு வித பயத்தையும் அழுத்தத்தயும் ஏற்படுத்தியது. இந்நிலையில் விடுதி அறையில் என் போர்வையப் போர்த்திக் கொண்டு தூங்குவது போல என்ன செய்வது என நினைத்து கண்ணில் கண்ணீர் வழிய படுத்துக் கொண்டிருந்தேன். அப்போது அறைக்குள் நுழைந்த சில வகுப்புத் தேழர்கள் சொன்ன வார்த்தைகள் என்னை மேலும் அழுதியது. நான் இருப்பதை அறியாமல், பொண்ணுங்க பின்னாடி சுற்றினால் x-க்கு(அட நாந்தாங்க) ஏற்பட்ட கதிதான். இனிமேல் மேலே வருவது முடியாது எனப் பேசிச் சென்றனர்.
இரண்டு நாட்கள் மந்திரித்து விட்ட கோழி மாதிரி இருந்து விட்டு விடுதியில் இருந்து வீட்டிற்குச் சென்றேன். அன்று மதியம் 2மணி,பொதிகைத் தொலைக்காட்சியில் ஒரு நாடகம். அதில் மேடையில் "Failure means delay. not defeat" என எழுதப்பட்டிருந்தது. அதைப் படித்தவுடன் உடனே மனதில் ஒரு வெறி வந்தது. நீண்ட நேரம் தாகமாக இருந்து தண்ணீர் கிடைத்தால் கிடைக்குமே ஒரு உணர்வு, அது போன்ற உணர்வு ஏற்ப்பட்டது.
அடுத்தடுத்த முயற்சியில் இறங்கினேன். நேரத்தை வீணாக்காமல் ஜாவா படிக்க ஆரம்பித்தேன். 24 மணி நேரமும் அதைப் பற்றித்தான் சிந்தனை. ஒரு மினி பிராஜக்ட் ஜாவாவில் ஆரம்பித்து அது மெகா பிராஜக்ட் லெவலில் சென்று கொண்டிருந்தது. அப்போது என் java code என்னவோ தரம் இல்லாதது(as per coding standard) தான். அதன் பயன்பாடு மற்றும் output நன்றாக அமைந்தது. அதை வைத்து என்னை நான் மார்க்கெட் செய்ய ஆரம்பித்தேன்.
6வது செமஸ்டரில் அத்தி பூத்தாற்போல ஒரு நல்ல கம்பெனி campus interviewக்கு வந்தது. மொத்தம் சுமார் 150 பேர் கலந்து கொண்டோம். முன்பே கம்பெனியைப் பற்றியும் அவர்களின் கேள்வித்தாள் முறை பற்றியும் வேறு சில கல்லூரிகளில் கேட்டு வைத்துக் கொண்டேன். போருக்குத் தயாராவது போல ஒரு வெறி, Aptidude R.S அகர்வால் புத்தகத்தில் இருந்து 90 கேள்விகள். நேரம் 90 நிமிடங்கள். யாராலும் முழுமையாக முடிக்க முடியாது. நான் சுமார் 45 பதில்கள் சரியாக விடை அளித்து இருப்பேன். கடைசி இரண்டு நிமிடங்கள், மீதமிருந்த கேள்விகளுக்கு random ஆக அடித்து விட்டேன். ஆனாலும் மதிப்பெண்கள் வெளியிட்ட போது என்னுடைய இடம் 72. முதல் 80 பேர்களை group discussion கு தேர்ந்தெடுத்தார்கள். 10 பேர்கள் கொண்ட குழுவாக 8 குழுக்கள். காரசாரமாக விவாதித்த பின்னர், என்னுடைய நிலை 13. அதாவது 72 வது இடத்தில் இருந்து 13க்கு முன்னேற்றம். முதல் 15 மாணவர்களை நேர்காணலுக்கு அழைத்தார்கள். அங்கு நான் பேசவில்லை. நான் செய்த மினி பிராஜக்ட் பேசியது. 5வது செமஸ்டரில் நான் செய்த உழைப்பு பேசியது.
நேர்காணலின் முடிவில் என்னுடைய இடம் 3. முதல் மூன்று பேர்களை தேர்வு செயவதாக அறிவித்த போது என் மனதில் ஓடியது Failure Means Delay. Not Defeat.
இப்போது இந்த வார்த்தைகளை நினைக்கும் போதும் மனது re-charge ஆகிறது.
இனி, நேர்காணலில் எப்படிப் பேசுவது என்று அடுத்த பதிவில் காண்போம்.
MCA படிப்பில் மூன்றாவது செமஸ்டரில் கப் வைத்தால் சில சிரமங்கள் உள்ளன. அதாவது 3வது தேர்வு முடிவுகள் 4வது தேர்வு நடப்பதற்கு ஒரு மாதத்திற்கு முன்பு MK யுனிவர்சிட்டியுல் சொல்லுவார்கள். அதை 4வது தேர்வுடன் சேர்த்து எழுதினால் 5வது தேர்வு நடப்பதற்கு ஒரு மாதம் முன்பு முடிவு அறிவிப்பார்கள். இங்கு தான் சிக்கலே. 5வது செமஸ்டர் ஆரம்பம் முதலே campus interview க்கு கம்பெனிகள் வர ஆரம்பிக்கும். பெரும்பாலான கம்பெனிகள் முதல் 3 மாதங்களில் தேர்வு அடையாவிட்டால் கம்பெனிகள் அமைவது கடினம். பல கம்பெனிகள் அரியர் இல்லாத மாணவர்களைத்தான் தேர்வு எழுத அனுமதிப்பார்கள்.
இந்த நிலையில் மூன்றாவது செமஸ்டரில் ஒரு பேப்பரில்(system engineering) அரியர்(cup) வைத்தேன். பள்ளியில் இருந்து ஒரு பாடத்தில் கூட பெயில் ஆனது இல்லை என்ற நினைப்பே மனதில் ஒரு வித பயத்தையும் அழுத்தத்தயும் ஏற்படுத்தியது. இந்நிலையில் விடுதி அறையில் என் போர்வையப் போர்த்திக் கொண்டு தூங்குவது போல என்ன செய்வது என நினைத்து கண்ணில் கண்ணீர் வழிய படுத்துக் கொண்டிருந்தேன். அப்போது அறைக்குள் நுழைந்த சில வகுப்புத் தேழர்கள் சொன்ன வார்த்தைகள் என்னை மேலும் அழுதியது. நான் இருப்பதை அறியாமல், பொண்ணுங்க பின்னாடி சுற்றினால் x-க்கு(அட நாந்தாங்க) ஏற்பட்ட கதிதான். இனிமேல் மேலே வருவது முடியாது எனப் பேசிச் சென்றனர்.
இரண்டு நாட்கள் மந்திரித்து விட்ட கோழி மாதிரி இருந்து விட்டு விடுதியில் இருந்து வீட்டிற்குச் சென்றேன். அன்று மதியம் 2மணி,பொதிகைத் தொலைக்காட்சியில் ஒரு நாடகம். அதில் மேடையில் "Failure means delay. not defeat" என எழுதப்பட்டிருந்தது. அதைப் படித்தவுடன் உடனே மனதில் ஒரு வெறி வந்தது. நீண்ட நேரம் தாகமாக இருந்து தண்ணீர் கிடைத்தால் கிடைக்குமே ஒரு உணர்வு, அது போன்ற உணர்வு ஏற்ப்பட்டது.
அடுத்தடுத்த முயற்சியில் இறங்கினேன். நேரத்தை வீணாக்காமல் ஜாவா படிக்க ஆரம்பித்தேன். 24 மணி நேரமும் அதைப் பற்றித்தான் சிந்தனை. ஒரு மினி பிராஜக்ட் ஜாவாவில் ஆரம்பித்து அது மெகா பிராஜக்ட் லெவலில் சென்று கொண்டிருந்தது. அப்போது என் java code என்னவோ தரம் இல்லாதது(as per coding standard) தான். அதன் பயன்பாடு மற்றும் output நன்றாக அமைந்தது. அதை வைத்து என்னை நான் மார்க்கெட் செய்ய ஆரம்பித்தேன்.
6வது செமஸ்டரில் அத்தி பூத்தாற்போல ஒரு நல்ல கம்பெனி campus interviewக்கு வந்தது. மொத்தம் சுமார் 150 பேர் கலந்து கொண்டோம். முன்பே கம்பெனியைப் பற்றியும் அவர்களின் கேள்வித்தாள் முறை பற்றியும் வேறு சில கல்லூரிகளில் கேட்டு வைத்துக் கொண்டேன். போருக்குத் தயாராவது போல ஒரு வெறி, Aptidude R.S அகர்வால் புத்தகத்தில் இருந்து 90 கேள்விகள். நேரம் 90 நிமிடங்கள். யாராலும் முழுமையாக முடிக்க முடியாது. நான் சுமார் 45 பதில்கள் சரியாக விடை அளித்து இருப்பேன். கடைசி இரண்டு நிமிடங்கள், மீதமிருந்த கேள்விகளுக்கு random ஆக அடித்து விட்டேன். ஆனாலும் மதிப்பெண்கள் வெளியிட்ட போது என்னுடைய இடம் 72. முதல் 80 பேர்களை group discussion கு தேர்ந்தெடுத்தார்கள். 10 பேர்கள் கொண்ட குழுவாக 8 குழுக்கள். காரசாரமாக விவாதித்த பின்னர், என்னுடைய நிலை 13. அதாவது 72 வது இடத்தில் இருந்து 13க்கு முன்னேற்றம். முதல் 15 மாணவர்களை நேர்காணலுக்கு அழைத்தார்கள். அங்கு நான் பேசவில்லை. நான் செய்த மினி பிராஜக்ட் பேசியது. 5வது செமஸ்டரில் நான் செய்த உழைப்பு பேசியது.
நேர்காணலின் முடிவில் என்னுடைய இடம் 3. முதல் மூன்று பேர்களை தேர்வு செயவதாக அறிவித்த போது என் மனதில் ஓடியது Failure Means Delay. Not Defeat.
இப்போது இந்த வார்த்தைகளை நினைக்கும் போதும் மனது re-charge ஆகிறது.
இனி, நேர்காணலில் எப்படிப் பேசுவது என்று அடுத்த பதிவில் காண்போம்.

8 Comments:
தமிழ்மணத்திற்கு வருக, வருக!!
உங்கள் முதல் பதிவே முதன்மையாக இருக்கிறது. தோல்வியைக் கண்டு துவண்டுவிடாதே என்ற அன்றைய பாடல் நினைவுக்கு வருகிறது.மேலும் தன்னம்பிக்கை ஊட்டும் பதிவுகளை இட வாழ்த்துக்கள்.
Failure is temporary. Giving up makes it permanent.
என் வலைப்பதிவினைத் தெடங்கி வைத்த மணியன் அவர்களுக்கும் உலகன் அவர்களுக்கும் என் நன்றிகள்.
Hello Mr X
neenga enn unga peyarai X enru vaithu kondeerkal? any sentiment?
Verygood effort
வாழ்த்துக்கள் உங்க பதிவு தினமலரில் வந்து இருக்குது.
great effort! congrats!
நன்றி அனானி மற்றும் சந்தோஷ்.
Post a Comment
<< Home