Saturday, March 25, 2006

நீ எதை எடுத்தாயோ அது இங்கிருந்தே எடுக்கப் பட்டது

இன்றைய வாரமலரில் இது உங்கள் இடம் பகுதியில் ஏ.ஸ்.தேவன் என்பவர் தன்னுடைய அனுபவத்தை எழுதியிருந்தார்.
அது அப்படியே உங்களுக்கு.

நான் சென்னையில் டிரைவராக பணிபுரிந்த போது, ஒரு நாள் பணி நிமித்தமாக சென்னை கே.கே.நகர் அருகில், ஒரு மணி நேரம்
காரில் காத்திருக்க வேண்டிய நிலை. அப்போது நான் கண்ட காட்சி என் வாழ்க்கையில் திருப்பு முனையாக இமைந்தது.
நான் காத்திருந்த இடத்தின் அருகில் இருந்த குப்பைத் தொட்டியில் பழைய பேப்பர் பிளாஸ்டிக் பொருட்கள் சேகரிப்பவர், அந்த குப்பையைக்
கிளறி அவருக்குத் தேவையான சில பொருட்களை எடுத்துச் சென்றார்.

பின் சிறிது நேரம் கழித்து மற்றொரு பழைய பொருள் சேகரிப்பவர் வந்து அப்படியே செய்தார். அது போல் அந்த ஒரு மணி நேரத்தில்
ஆறு நபர்கள் வந்து, அந்த குப்பைத் தொட்டியைக் கிளறி தேவையானது கிடைக்க, நம்பிக்கையோடு அடுத்த இடம் சென்றனர்.
வாழ்க்கையில் மிகவும் தோல்விகளைச் சந்தித்து எதிர்காலம் கேள்விக்குறி என்ற நிலையில் அப்போது இருந்தேன். ஆனால் ஒரே ஒரு குப்பைத் தொட்டியில் ஆறு பேருக்குப் பலன் கிடைக்கும் போது, இந்த பரந்த உலகில் வாழ்க்கையில் முன்னேற எத்தனையோ நேர்மையான, நிலையான
ஒளிமயமான வாய்ப்புகள் உண்டு என்பதை அதன் பிறகு மனதில் உறுதியோடு செயல்பட்டேன்.

தற்போது நான் நான்கு பேர்களுக்கு வேலை கொடுக்கும் அளவிற்கு சொந்தத் தெழில் செய்கின்றேன். இளைஞர்களே... வாழ்க்கையில்
எற்படும் தோல்விகளையும், ஏமற்றங்களையும் கண்டு மனம் தளராமல் முயற்சி செய்தால் வெற்றி நிச்சயம்.
-- நன்றி தினமலர்-வாரமலர்.

வாழ்க்கையில் நமக்குத் தேவையானவைகள் நம்மைச் சுற்றியே இருக்கின்றன. இதைத்தான் கிருஷ்ணர் "நீ எதை எடுத்தாயோ அது இங்கிருந்தே எடுக்கப் பட்டது" என்று கூறினாரோ?

0 Comments:

Post a Comment

<< Home